fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

செங்கல்பட்டில் இன்று ஒருநாளில் மட்டும் 188 பேருக்கு தொற்று…! பீதியில் மக்கள்!

chengalpattu receive 188 new corona cases

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 188 பேருக்கு கொரோனா உறுதியாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,620 ஆக உள்ளது.

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி, கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக 54,449 ஆக இருக்கிறது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 666-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் 38,327 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 3,432 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று 188 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆகையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,620 ஆக உயர்ந்துள்ளது. இது வரை 1,755 பேர் குணமடைய 41 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் செங்கல்பட்டு நகராட்சி உதவியாளர், ஆணையர் உள்ளிட்டோருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close