தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. இதையடுத்து, அதே ஆண்டு மே 7-ம் தேதி மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றார். அவர் முதல்வராக பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்றது. திமுக அரசின் 5-வது ஆண்டு தொடங்கியுள்ளது.இதையொட்டி, நேற்று காலை முதல்வர் ஸ்டாலின், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அறிஞர் அண்ணா, மு.கருணாநிதி நினைவிடங்களில் மலர்கள் தூவிமரியாதைசெலுத்தினார்அவருடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன, கோவி.செழியன், டி.ஆர்.பி.ராஜா, மு.பெ.சாமிநாதன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மேயர் ஆர்.பிரியா, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து, தலைமைச்செயலகம்வந்தமுதல்வருக்கு,அமைச்சர்கள்,தலைமைச்செயலர்நா.முருகானந்தம்,டிஜிபிசங்கர்ஜிவால்உள்ளிட்டஅதிகாரிகள்வாழ்த்துதெரிவித்தனர்.முன்னதாக முதல்வரின் முகாம் அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து துணை முதல்வர் உதயநிதி, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்பிக்கள் தயாநிதிமாறன், ஆ.ராசா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.அதனைத் தொடர்ந்து, அரசு சார்பில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற திமுக அரசின் 4 ஆண்டு நிறைவு விழா மற்றும் 4 ஆண்டு சாதனை விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, பல்வேறு துறைகள் சார்பில் 390 பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார்.அரசு சார்பில் சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற திமுக அரசின் 5-ம் ஆண்டு தொடக்க விழாவில், அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 214 புதிய பேருந்துகள் சேவையை தொடங்கிவைத்தார். தொடர்ந்து, சென்னை வள்ளலார் நகரிலிருந்து விவேகானந்தர் இல்லம் வரை செல்லும், தடம் எண் 32பி என்ற பேருந்தில் பயணித்தார். உடன் பயணித்த மகளிருடனும் கலந்துரையாடினார்.திமுக அரசின் 5-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு மக்களின் பேராதரவோடு 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தில் நல்லாட்சி தொடர முதல்வர் மு.க.ஸ்டாலினின் 4 ஆண்டு சாதனை நிச்சயம் துணை புரியும். நாளை நமதே என்பது நாளுக்கு நாள் உறுதியாகி வருகிறது. தமிழக முதல்வரின் சாதனை பயணம் தொடர மீண்டும் வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள வாழ்த்து கடிதத்தில் கூறியிருப்பதாவது: ‘குடிஅரசு’ ஏடு சார்பில் திமுக ஆட்சியின் சாதனைகளை உலகறிய பறைசாற்றும் நோக்கத்தில், “திராவிட மாடல் ஆட்சியின் சாதனை சரித்திரம் இதோ!” என்ற சிறு கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.இந்நூல்பட்டிதொட்டியெல்லாம் பரவ வேண்டும். இச்சாதனை சரித்தரம், தங்கள் ஆட்சி திராவிடத்தின் மீட்சி என்பதால், இதையே, தங்களுக்கு கருத்து மாலையாக காணிக்கையாக்கி மகிழ்கிறது. இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
Read Next
Others
58 mins ago
செங்குன்றம் ரேவதி ஸ்டோர்–சிறப்பு செய்தி
Others
4 days ago
தமிழக இருஅமைச்சர்கள்துறைகள் மாற்றம்…
34 mins ago
எடப்பாடி பழனிசாமிக்கு 71 வது பிறந்தநாள் விழா ….
42 mins ago
வணிக போராளி த. வெள்ளையன் வரலாற்று நூல்!! சிறப்பு செய்தி.
58 mins ago
செங்குன்றம் ரேவதி ஸ்டோர்–சிறப்பு செய்தி
3 days ago
செங்குன்றம் மசூதி அருகே வெடிகுண்டு மிரட்டல் போலீஸ் விசாரணை..
4 days ago
தமிழக இருஅமைச்சர்கள்துறைகள் மாற்றம்…
4 days ago
காஞ்சிபுரம்–பட்டியலின மக்கள் திடீர் போராட்டம்…
4 days ago
ராணிப்பேட்டை–பெயருக்குத்தான் விவசாய குறைத்திர்வு கூட்டமா….?
4 days ago
காஞ்சிபுரம்–பட்டியலின மக்கள் திடீர் போராட்டம்..
4 days ago
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயண பிரசாத் காலமானார்…
4 days ago
அஜித் தோவல்–மீண்டும்பாகிஸ்தான் தாக்கினால் பதிலடிக்கு தயார்…
Related Articles
தேவசெய்தி 7 / 5 / 25
5 days ago
தேவசெய்தி 6 / 5 / 25
6 days ago
காவல்துறையில் பதவி உயர்வு பெற்ற நடிகர்…..
6 days ago
மத்திய அரசு–மக்கள் பாதுகாப்புக்கு மே 7-ல் போர்க்கால ஒத்திகை நடத்த மாநிலங்களுக்கு உத்தரவு.
6 days ago
இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு…?
6 days ago