Others
அரசு போக்குவரத்துக்கழக மெத்தனப்போக்கு…..?
. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக
மெத்தனப்போக்கு பயணிகள் பெரும் அவதி...
தேனி மாவட்ட தமிழ்நாடு எல்லைப் பகுதி கேரளா எல்லைப் பகுதியான குமுளியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து தோட்ட விவசாயிகள், வியாபாரிகள், தொழில் வர்த்தகம் இப்பாதை வழியாகத்தான் நடைபெறுகிறது. ஆனால் பயணிகளுக்கு எவ்வித வசதியும் செய்யப்படவில்லை, மேலும் இரவு9 மணிக்கு மேல் பேருந்து சரிவரை இயக்கப்படுவதில்லை, மேலும் தகவல் அறிய பேருந்து வந்து செல்லும் அட்டவணை, தகவல் கூறும் ஊழியரோ இல்லை, மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் அலட்சிய போக்கினால் பயணிகள், பனி, கடுங்குளிர், இருள் , மழையிலும் அவதிக்குள் ஆகின்றனர். இது பிரச்சினையை குறித்து மண்டல மேலாளர் உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.