fbpx
RETamil News

இத்தாலியைவிட அமெரிக்காவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

சீனாவில் தோன்றிய இந்த கொரோனா வைரசால் உலகம் முழுவதிலும் உள்ள 200-க்கும் மேற்பட்ட நாடுகள் பரிதவித்து வருகின்றனர். இந்த வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்துவது அனைத்து நாடுகளுக்கும் பெரும் சவாலாக உள்ளது. சீன நாட்டில் உருவான இந்த வைரஸ் தொற்று நோய்யானது அங்கு ஏற்படுத்திய பாதிப்பை விட மற்ற நாடுகளில் ஏற்படுத்திய பாதிப்பு அதிகம். அதில் முக்கியமாக அமெரிக்கா அதிக விலை கொடுத்து கொண்டு வருகின்றது.

உலகளவில் சர்வ வல்லமை பெற்று விளங்கும் அமெரிக்காவை , கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் உருக்கி எடுத்து வருகின்றது. விஞ்ஞனம் , மருத்துவம், தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும், அந்த நாடே கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திக்கி திணறி வருகின்றது.

அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது இத்தாலியை விடவும் அதிகரித்து விட்டது. அமெரிக்காவில் தற்போதைய நிலவரப்படி கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 5,05,237-ஆக உயர்ந்துள்ளது.அங்கு கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பால் 919 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனால் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 19,666-ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பால் அதிக அளவில் உயிரிழப்புகளை கொண்டுள்ள நாடாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது.

இவ்வாறு அமெரிக்காவில் பலி எண்ணிக்கையில் முதலாவதாகவும், அதேபோல் கொரோன தொற்று நோயாளிகளை அதிக அளவில் கொண்டதாலும் அமெரிக்கா முதலாவதாக விளங்குகிறது.

முதலில் கொரோனாவால் அதிகம் பாதிப்படைந்ததில் இத்தாலி முதலாவதாக விளங்கியது அங்கு தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19,468-ஆக உள்ளது.இத்தாலிக்கு அடுத்தபடியாக ஸ்பெயினில் கொரோனாவால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்பெயினில் தற்போதைய நிலவரப்படி 16,353 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close