fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு…! காவி சாயத்தை ஊற்றியதால் பரபரப்பு!

Periyar statue insulted in Coimbatore

கோவை:

கோவையில் பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்ட சம்பவம், திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலையை மர்ம நபர்கள் இன்று அவமதிப்பு செய்துள்ளனர். சிலையின் மீது காவி சாயத்தை ஊற்றியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்த தி.க. மற்றும் திமுகவினர் அங்கு குவிந்ததால் பதற்றம் உருவானது. தகவல் அறிந்து போலீசாரும் அங்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பெரியார் சிலையை அவமதித்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

இந்நிலையில், போத்தனூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் அருண்கிருஷ்ணன் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்ட விவகாரத்தில் தானாக வந்து காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளான்.

இவன் பாரத்சேனா அமைப்பை சேர்ந்தவன். அவனை  போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close