fbpx
RETamil Newsஇந்தியா

உத்திரபிரதேச சிறுவன் 13 வயதில் 100-க்கும் மேற்பட்ட புத்தகம் எழுதி சாதனை !!

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 13-னே வயது நிரம்பிய மிரிகேந்திர ராஜ் என்ற சிறுவன் ஆஜ் கா அபிமன்யு என்ற புனை பெயரில் பல்வேறு புத்தகங்களை எழுதி வருகிறார்.

அந்த சிறுவன் தன் 6 வயதிலிருந்தே புத்தகங்களை எழுத தொடங்கியதாகவும், இதுவரை 135 புத்தகங்களை எழுதியுள்ளதாகவும் , அவை ஒவ்வொன்றும் 25 முதல் 100 பக்கங்களை கொண்டவை என்றும் கூறியுள்ளார்.இதுதவிர உத்திரபிரதேச மாநில முதல்வர் நாத் உட்பட பல பிரபலங்கல் குறித்து தான் புத்தகங்களை எழுதியுள்ளதாகவும் அச்சிறுவன் கூறியுள்ளான்.

தற்போதுவரை தான் 4 உலக சாதனைகளை செய்துள்ளதாகவும், தனக்கு லண்டன் உலக சாதனை பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்க முன் வந்தது எனவும் அச்சிறுவன் கூறியுள்ளார். பின்வரும் காலங்களில் தான் ஒரு எழுத்தாளராகி பல புத்தகங்களை எழுதுவதே தனது லட்சியம் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close