RETamil Newsஇந்தியா
உத்திரபிரதேச சிறுவன் 13 வயதில் 100-க்கும் மேற்பட்ட புத்தகம் எழுதி சாதனை !!
உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 13-னே வயது நிரம்பிய மிரிகேந்திர ராஜ் என்ற சிறுவன் ஆஜ் கா அபிமன்யு என்ற புனை பெயரில் பல்வேறு புத்தகங்களை எழுதி வருகிறார்.
அந்த சிறுவன் தன் 6 வயதிலிருந்தே புத்தகங்களை எழுத தொடங்கியதாகவும், இதுவரை 135 புத்தகங்களை எழுதியுள்ளதாகவும் , அவை ஒவ்வொன்றும் 25 முதல் 100 பக்கங்களை கொண்டவை என்றும் கூறியுள்ளார்.இதுதவிர உத்திரபிரதேச மாநில முதல்வர் நாத் உட்பட பல பிரபலங்கல் குறித்து தான் புத்தகங்களை எழுதியுள்ளதாகவும் அச்சிறுவன் கூறியுள்ளான்.
தற்போதுவரை தான் 4 உலக சாதனைகளை செய்துள்ளதாகவும், தனக்கு லண்டன் உலக சாதனை பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்க முன் வந்தது எனவும் அச்சிறுவன் கூறியுள்ளார். பின்வரும் காலங்களில் தான் ஒரு எழுத்தாளராகி பல புத்தகங்களை எழுதுவதே தனது லட்சியம் எனவும் தெரிவித்துள்ளார்.