திருவள்ளூர்மாவட்டசிலம்பம் கமிட்டி செய்தி 5 / 9 / 22
திருவள்ளூர்மாவட்டசிலம்பம் கமிட்டி சார்பில் ஆவடி நடராஜன் சிலம்பம் கோச்சிங் கிளப் இணைந்து மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி ஆவடி கொள்ளுமேடு நபி கிரசன்ட் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனர்
சி. காமராஜ் ஐஏஎஸ் அவர்கள் போட்டியை தொடங்கி வைத்தார் .
தேசிய நிர்வாகிகள் முருகக்கனி. ராஜா. துரை. மற்றும் மாநில தலைவர். பாலமுருகன்.
மாவட்ட தலைவர் ராஜா . செயலாளர் ரஜினி. பொருளாளர் பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர். நடராஜன் சிலம்பம் கோச்சிங் கிளப் தலைவர் நடராஜன். செயலாளர் மணிகண்டன் அனைவரையும் வரவேற்றனர் நபி கிரசன்ட் மெட்ரிக் பள்ளி தாளாளர்.முகம்மதுஉசேன் நன்றி கூறினார்.போட்டியில் வெற்றி பெற்ற வீரர்.வீராங்கனைகளுக்கு உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்க துணைத் தலைவர். பவர் பாண்டியன் ஆசான். மாலா பிரகாஷ்.சதீஷ்குமார்.ஊராட்சி மன்ற தலைவர். பிரபாகரன். காமேஷ் வரன். பதக்கம் மற்றும் சான்றிதழ் களை வழங்கினர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் மாநில போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள் என்று மாநில தலைவர் பாலமுருகன் தெரிவித்தார்.