Others
அமைச்சர் சா.மு.நாசர் மழை நீரை வெளியேற்றும் பணிகளைவிரைந்துமேற்கொள்ள உத்தரவிட்டார்.
திருவள்ளுர் மாவட்டம், புழல் ஊராட்சி ஒன்றியம், தீர்த்தகரியம்பட்டு குமரன் நகர் பகுதியில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள் தேங்கியுள்ள மழை நீர் வெளியேற்றும் பணிகள் தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மழை நீரை வெளியேற்றும் பணிகளை விரைந்து மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப. அவர்கள், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.சுதர்சனம் அவர்கள், வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, நெடுஞ்சாலைகள் துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.