ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் கோவிட் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என ஒன்றிய அரசு நிபந்தனை விதித்துள்ளது. ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் வகையில் ராகுல் காந்தி தலைமையில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை காங்கிரஸ் நடத்தி வருகிறது. தமிழகத்தின் குமரியில் தொடங்கிய இந்த யாத்திரை, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, மஹாராஷ்ட்ரா, மத்தியப்பிரதேசத்தில் நிறைவு பெற்று, தற்போது ராஜஸ்தானில் 104 வது நாளாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே நாடு முழுவதும் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியிருந்தது.இந்நிலையில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் கோவிட் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என ஒன்றிய அரசு நிபந்தனை விதித்துள்ளது. இது தொடர்பாக சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எழுதிய கடிதத்தில்; ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் கோவிட் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்படுத்துதல் உள்ளிட்ட கொரோனா விதிகளை கடைபிடிக்க வேண்டும். கோவிட் நடைமுறைகளை பின்பற்ற முடியாவிட்டால் தேசநலனை கருதி நடை பயணத்தை ஒத்திவைக்க வேண்டும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Read Next
Others
7 hours ago
தேவ செய்தி
Others
8 hours ago
நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம்–செய்தி.
Others
1 day ago
உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்…
Others
1 day ago
உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்….
7 hours ago
தேவ செய்தி
8 hours ago
ஸ்டிக்கர் ஒட்டுவதில் போலீஸ் கட்டுப்பாடு– செய்தி
8 hours ago
டெல்லி ஐகோர்ட்–‘டீப் பேக்’ வீடியோக்கள்தடுக்க வலியுறுத்திய மனுஇன்று விசாரணை…
8 hours ago
நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம்–செய்தி.
8 hours ago
K V தங்கபாலு–நீலன்அவர்கள்படத்திற்குமலர்தூவிமரியாதை…
9 hours ago
கடலூர்–பரங்கிப்பேட்டைமற்றும் பு,முட்லுரில்உழைப்பாளர் தினவிழா..
9 hours ago
தமிழகஅரசு–புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி ஜூன் மாதம் தொடக்கம்..
10 hours ago
30 நாட்களில் சொத்து வரி சென்னை மாநகராட்சி ரூ.382 கோடி வசூல்…
1 day ago
உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்…
1 day ago