Others
திருவண்ணாமலை–ஆனந்தி மரணத்தில்சந்தேகம்..கொலையா, தற்கொலையா..?
மயிலாடுதுறை எட குடியார் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி திருவண்ணாமலை பேங்க் ஆப் பரோடாவில் வேலை பார்க்கும் இவர் கணவருடன் திருவண்ணாமலை பே.கோபுரம் மூன்றாவது தெருவில் வசித்து வந்தார் இந்த நிலையில் மர்மமான முறையில் கடந்த புதன்கிழமை தூக்கிட்டு இறந்துகிடந்தார். கணவர் தன் மாமனார் மாமியாருக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் போட்டுவிட்டு தலைமறைவானார். வியாழக்கிழமை காலை வங்கி மேலாளர் அலைபேசி மூலம் ஆனந்தி தாய் தந்தையருக்கு தங்கள் மகள் இறந்து விட்டாள் என்ற செய்தி சொன்ன பிறகு இன்று திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் ஆஜராகி ஆனந்தி கணவரை கைது செய்ய வேண்டும் என செய்தியாளர்களை சந்தித்தார்.



