fbpx
Others

தேனி-பத்திரிகையாளர் மீது கொலைவெறி தாக்குதல்…,வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தேனியை அடுத்த பூதிபுரம் பேரூராட்சியில்
ஆரம்ப சுகாதார நிலையத்தின் வெகு அருகாமையில் பெருமளவு மக்கள் கூடும் இடத்தில் மதுக்கடையும், பாரும் அமைந்துள்ளது.துவக்கத்திலிருந்து அந்தக் கடை அந்த பகுதியில் அமைவதை எதிர்த்து பூதிபுரம் மக்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.ஆனால் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு அரசு அதிகாரிகள் செவி சாய்க்க வில்லை.மேற்படி மதுபானக் கடை மற்றும் பாரை அப்புறப் படுத்துக் கோரி
பூதிபுரம் பேரூராட்சி அலுவலகத்திற்கு முன்னால், பொது மக்கள் ஆதரவுடன், பல்வேறு அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வை படம் பிடித்துக் கொண்டிருந்த சத்தியம் TV ன் மாவட்ட செய்தியாளரைத் கடுமையாகத் தாக்கி செய்தி லோகவையும் , செய்தி லோகவையும் பறித்துக் கொண்டு கொலை மிரட்டல்விடுத்துச்சென்றுள்ளனர்.இதுஅப்பட்டமானஜனநாயகவிரோதசெயலாகும்.பத்திரிகையாளரைத் தாக்கி மிரட்டுவது பத்திரிகை சுதந்திரத்தை பறிப்பதற்கொப்பாகும் .
தமிழ் நாடு ஜெனரல் எம்ப்ளாய்ஸ் யூனியன் சார்பில் இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்திய சமூக விரோத கும்பலை உடனடியாக கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் நாடு அரசை ” தமிழ்நாடு ஜெனரல் எம்ப்ளாய்ஸ் யூனியன் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
T.இராசதுரை மாவட்ட செயலாளர் தமிழ் நாடு ஜெனரல் எம்ப்ளாய்ஸ் யூனியன். தேனி.

Related Articles

Back to top button
Close
Close