fbpx
Others

திருவாரூர்-தென்காரவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குடியரசு தின விழா.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் தென்காரவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 26.01.2024 அன்று நாட்டின் 75வது குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு தலைமையாசிரியர் தர்மராஜ் தலைமை வகித்திருந்தார். பட்டதாரி ஆசிரியர் அன்பழகன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் சார்பாக மாணவர்களுக்கு குடியரசு தினம் தொடர்பான பேச்சுப் போட்டி நடத்தி வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினர். விழாவில் மக்கள் பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மைக் குழுவினர், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் இந்நாள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இறுதியாக பட்டதாரி ஆசிரியர் ஜூலியட் மேரி நன்றி கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close