உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை—மசோதாக்கள் மீது கவர்னர் முடிவெடுப்பது..?
மசோதாக்கள் மீது கவர்னர் முடிவெடுப்பது குறித்து விதிமுறை வகுக்க நேரிடும் என உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது கேரளா சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்களில் பொது சுகாதார மசோதாவுக்கு மட்டுமே மாநில கவர்னர் ஆரிப் முகமது கான் ஒப்புதல் அளித்துள்ளார் மீதமுள்ள ஏழு மசோதாக்களை ஜனாதிபதிக்கு கவர்னர் ஆரி முகமது கான் அனுப்பி வைத்தார் இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கேரளா அரசு வழக்கு தொடர்ந்தது இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது[ 29 / 11 /2023 ] அப்போது 7 மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டிய அவசியம் என்ன?. மசோதாக்களை தாமதப்படுத்த வேண்டும் என்ற.உள்நோக்கத்துடன் கவர்னர் செயல்படுகிறார் என கேரள அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து கேரளாகவர்னருக்கு எதிரான மாநில அரசின் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது…2 ஆண்டுகளாக மசோதாக்களை கிடப்பில் போட்டது ஏன்?. மசோதாக்கள் மீது காலதாமதம்இல்லாமல் .கேரளாகவர்னர் முடிவெடுக்க வேண்டும். கவர்னர்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வரையறை செய்ய நேரிடும். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் முதல்வரை கவர்னர் சந்திக்க விரும்புவது அரசியல் கணக்குகளைத் தீர்த்து கொள்ளவா?. இவ்வாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். …
.