fbpx
Others

“யாரை மிரட்டுகிறீர்கள்.’முதல்-அமைச்சர்கேள்வி. ?

மிசாவையே பார்த்த இந்தஸ்டாலினையா...?”


“யாரை மிரட்டுகிறீர்கள்..? மிசாவையே பார்த்த இந்த ஸ்டாலினையா..?” முதல்-அமைச்சர் கேள்வி
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மதுரையில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் பரப்புரை மேற்கொண்டார்.
அதில் பேசிய அவர், மதுரைக்கு பல்வேறு திட்டங்களை உருவாக்கி கொடுத்த ஆட்சி திமுக ஆட்சி. தென் தமிழகத்திற்கு தலைநகரம் போல இருக்கிறது மதுரை. திமுக வரலாற்றில் மதுரையும், மதுரை வரலாற்றில் திமுகவும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பினைந்தவை. தமிழ்நாட்டின் தென்மாவட்ட இளைஞர்களின் அறிவின் ஆலயமாக மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகம் அமையும்.
மதுரை மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்காக 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் மதுரையை லண்டனாக்க போகிறோம், சிங்கப்பூர் ஆக்கப்போகிறோம் என அன்றைய அமைச்சர்கள் தினமும் பேட்டி கொடுத்தார்கள்; ஆனால், மதுரையை அவர்கள் சீரழிச்சதுதான் மிச்சம்.
திமுக ஆட்சிக்கு இன்னும் 27 அமாவாசைகள்தான் இருக்கு என புது ஜோசியம் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள்; அரசியல் அமாவாசைகள் யாரென தெரிந்துதான் அவர்களை புலம்ப வைத்திருக்கிறார்கள் தமிழக மக்கள். மதுரையை ரோம் நகரைப் போல மாத்துகிறோம், அப்படி மாத்துகிறோம் என சொன்னார்கள்; யார் சொன்னது? பெரிய விஞ்ஞானி செல்லூர் ராஜு சொன்னாரு; செய்தாரா? ‘பரமார்த்த குருவும் அவரது சீடர்களும்’ என்ற கதையைப்போல தான் அதிமுக ஆட்சி நடைபெற்றது.
தொழில் வளர்ச்சியை முடக்கியதும், முதலீடுகளை லஞ்சம் கேட்டு துரத்தியதும், சேதுசமுத்திர திட்டத்தை முடக்கியதும் அதிமுக ஆட்சி... யாரை மிரட்டுகிறீர்கள் பழனிசாமி? மிசாவையே பார்த்த ஸ்டாலினை மிரட்டுகிறீர்களா? உங்களின் பொறுப்பற்ற பேச்சுக்கு தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். 2024ல் ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் என பழனிசாமி ஆருடம் சொல்கிறார். இவர்களுடைய ஞான திருஷ்டிக்கு மட்டும்தான் இதெல்லாம் தெரிகிறது போல. குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமை தொகை திட்டத்தை விரைவில் நிறைவேற்றுவோம். நான் சொன்னா அதை நிச்சயம் நிறைவேற்றுவேன்” என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்

Related Articles

Back to top button
Close
Close