fbpx
Others

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கசிந்த எம்.பி.பி.எஸ். வினாத்தாள் …?

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு தேர்வு வினாத்தாள் கசிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வினாத்தாள் கசிந்ததை அடுத்து எம்.பி.பி.எஸ். தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. ஒத்திவைக்கப்பட்ட எம்.பி.பி.எஸ். தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளதுபுதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 12-க்கும் மேற்பட்ட மருத்துவக்கல்லூரிகள் உறுப்புக் கல்லூரிகளாக உள்ளன. முதலாமாண்டு தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வந்தநிலையில் தேர்வு ஒத்திவைத்துள்ளனர்.புதுச்சேரியில் 9 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த 8 கல்லூரிகளும் புதுச்சேரியில் 1380 எம்பிபிஎஸ் இடங்களை வழங்குகின்றன. எம்பிபிஎஸ்ஸிற்கான புதுச்சேரியில் உள்ள மொத்தஇடங்களில்,பெரும்பான்மையான இடங்கள் பாண்டிச்சேரியில் உள்ள மொத்தம் 6 தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கீழ் வருகின்றன. 1000 மற்றும் மீதமுள்ள 380 எம்பிபிஎஸ் இடங்கள் 2 பாண்டிச்சேரி அரசு மருத்துவக் கல்லூரிகளால் நடத்தப்படுகின்றன.மேலும், புதுச்சேரியின் அனைத்து 8 மருத்துவக் கல்லூரிகளும், புதுச்சேரி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து MD/MS/Diploma திட்டங்களின் கீழ் 759 இடங்களுடன் முதுகலை படிப்புக்கான வாய்ப்புகளை வழங்குகின்றன. சூப்பர் ஸ்பெஷாலிட்டி திட்டத்திற்கு, பாண்டிச்சேரியின் 3 மருத்துவக் கல்லூரிகள் DM/MCH திட்டங்களில் 58 இடங்களை வழங்குகின்றன.இந்நிலையில் இன்று நடைபெற இருந்த எம்பிபிஎஸ் முதலாமாண்டு தேர்வு வினாத்தாள் கசிவானது. வினாத்தாள் கசிந்ததை அடுத்து எம்.பி.பி.எஸ். தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. ஒத்திவைக்கப்பட்ட எம்.பி.பி.எஸ். தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close