fbpx
RETamil NewsTrending Nowதமிழ்நாடு

பொருளாதாரத்தை சீரமைக்க உயர்மட்டக்குழு..! தமிழக அரசு உத்தரவு

High-level committee to reform the economy by tamilnadu government

சென்னை: ஊரடங்கு காலத்தில் தமிழகத்தின் பொருளாதாரத்தை சீரமைக்க உயர்மட்டக்குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கு காரணமாக கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் 24 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இக்குழு தொழில்துறையினர் மற்றும் வணிகர்கள் உள்ளிட்டோரிடம் உயர்மட்டக்குழு கருத்துகளை கேட்டறியவுள்ளது.

பொருளாதாரத்தை சீரமைப்பது குறித்து ஆய்வு செய்து 3 மாத காலத்தில் அரசிடம் குழு அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று  தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close