கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்.
பானஜி:
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்.
முன்னாள் மத்திய அமைச்சரும் கோவா முதல்வருமான மனோகர் பாரிக்கர் புற்று நோயால் பாதிப்பட்டு தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு வீட்டிலேயே தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், அவரது உடல்நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்துவரும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
மனோகர் பாரிக்கரை காப்பாற்ற தொடர்ந்து போராடி வந்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி முதல்வர் மனோகர் பாரிக்கர் இரவு 8 மணி அளவில் காலமானதாக டாக்டர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இதனையடுத்து பாஜக நிர்வாகிகள் கூட்டம் கோவாவில் நடைபெற்று வருகிறது. முதல்வர் மனோகர் பாரிக்கரின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.