Others
சர்ச்சைகளில் சிக்கும் கர்நாடக அரசு –சித்தராமையாவுக்கு நெருக்கடி..?


வால்மீகி ஊழல் குற்றச்சாட்டு குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்திவருகிறது. இந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது மாநில காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்தது. அந்த எஃப்.ஐ.ஆருக்கு உயர் நீதிமன்றம் சமீபத்தில் தடை விதித்தது. உயர் நீதிமன்றத்தின் தடையுத்தரவு, மாநில அரசு மீது விழுந்த அடி என்று பா.ஜ.க-வினர் கூறுகிறார்கள். வால்மீகி ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் முன்னாள்அமைச்சர்நாகேந்திரா,அமலாக்கத்துறையால்கைதுசெய்யப்பட்டிருப்பதுகுறிப்பிடத்தக்கது.இந்தப் பரபரப்பான சூழலில், சித்தராமையா அரசுக்கு எதிராக பெங்களூருவிலிருந்து மைசூரு வரையிலான பாதயாத்திரையை ஆகஸ்ட் 3-ம் தேதி பா.ஜ.க தொடங்குகிறது. மைசூரு நில விவகாரத்தில் முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, ஏழு நாள்கள் இந்தப் பாதயாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளனர்.மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி, தற்போது மோடி அமைச்சரவையில் அமைச்சராக இருக்கிறார். பாதயாத்திரை குறித்து தங்களுடன் கலந்தாலோசிக்காமல் பா.ஜ.க தன்னிச்சையாக முடிவெடுத்ததால் கடுப்பான மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர்கள், பா.ஜ.க நடத்தும் பாதயாத்திரையில் பங்கேற்க மாட்டோம் என்று அறிவித்தனர். பிறகு, ‘இந்தக் குற்றச்சாட்டைப் பொருத்தளவில் பாதயாத்திரையால் எந்தத் தீர்வும் ஏற்படப்போவதில்லை. ஆகவே, நாங்கள் இதைசட்டரீதியாகஅணுகப்போகிறோம்’என்றுகுமாரசாமிகூறினார்.பொதுவாகவே, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மாநில அரசுக்கும் ஆளுநர்களுக்கும் இடையில் நிலவி வரும் மோதல் போக்கு, கர்நாடகாவிலும் நிகழ்ந்துவருகிறது. சித்தராமையா அரசுக்கு எதிராக பா.ஜ.க-வினர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அது குறித்து விளக்கம் அளிக்குமாறு மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பினார் ஆளுநர் தாவர்சந்த் கெலாட். அதனால் கோபமடைந்த முதல்வர் சித்தராமையா, ‘மாநில அரசிடம் விளக்கம் கோரி ஆளுநர் நோட்டீஸ் அனுப்புவது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. மத்திய அரசின் பொம்மையாக ஆளுநர் இருக்கிறார்’ என்று சாடினார்.சித்தராமையா அரசுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக நெருக்கடி கொடுத்துவரும் நிலையில், சித்தராமையாவுக்கும் டி.கே.சிவக்குமாருக்கும்இடையேஅதிகாரப்போட்டிதீவிரமடைந்துவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆகவேதான், அவர்கள் இருவரையும் ஒற்றுமையுடன் பணியாற்றுமாறு காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை சமீபத்தில் அறிவுறுத்தியதாக செய்திகள் வெளியானது. மேலும், அரசுக்கு எதிராக தொடர் குற்றச்சாட்டுகளும் சர்ச்சைகளும் எழுந்துவரும் நிலையில், திடீரென்று டெல்லிக்குச் சென்று தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கேவையும்,ராகுல்காந்தியையும்சித்தராமையாவும்,டி.கே.சிவக்குமாரும் சந்தித்திருக்கிறார்கள். சொந்தக் கட்சியினராலும், எதிர்க்கட்சியினராலும் வரும் நெருக்கடிகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறார் சித்தராமையா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.!