மத்திய பாதுகாப்புத் துறை செயலாளருக்கு உறுதியானது கொரோனா..! அலுவலகம் வராத அமைச்சர்!
Central Defence secretary got corona
டெல்லி:
மத்திய பாதுகாப்புத் துறை செயலாளருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
200 நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது கொரோனா வைரஸ். நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது.
இந் நிலையில் மத்திய பாதுகாப்புத் துறை செயலாளருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. இதனையடுத்து பாதுகாப்புத்துறை அமைச்சர் உட்பட பல முக்கிய நிர்வாகிகள் யாரும் சில நாட்களாக அலுவலகம் வரவில்லை.
பாதுகாப்புத் துறை செயலாளருடன் தொடர்பில் இருந்த அதிகாரிகள் சிலர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பாரத் பூஷன் பாபு கூறியதாவது:
பாதுகாப்பு செயலாளரிடம் இருந்து தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. முக்கிய அதிகாரிகளும் அலுவல் நிமித்தமாக தொலைபேசி வாயிலாக மற்ற அதிகாரிகளுடன் பேசி வருகின்றனர் என்றார்.