எடப்பாடி பழனிசாமி, கே.ஏ.செங்கோட்டையன் இருவருமே கவுண்டர்கள்..கவுண்டன் START…?
1972-ம் ஆண்டு அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கியபோதே அக்கட்சியில் பயணித்து வந்தவர் கே.ஏ.செங்கோட்டையன். 1977-ம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதியில் இருந்துமுதல்முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அதன் பிறகு 8 முறை கோபிச்செட்டிபாளையம்தொகுதியில்இருந்துசட்டசபைக்குதேர்ந்தெடுக்கப்பட்டார்.1996-ம் ஆண்டு தேர்தலில் மட்டுமே தோல்வியடைந்த அவர், ஈரோடு மாவட்டத்தில் செல்வாக்கு மிகுந்தவராக திகழ்ந்தார்.இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், முதலில் கட்சிப் பதவிபறிக்கப்பட்டது. அதன்பிறகுஅ.தி.மு.க.வில்இருந்தும்நீக்கப்பட்டார்.அவருடையஆதரவாளர்களும்கட்சியில்இருந்துவெளியேற்றப்பட்டநிலையில்,கே.ஏ.செங்கோட்டையன்நடிகர்விஜய்தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முடிவு செய்தார். அதன்படி,இன்றுவிஜய்முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் கே.ஏ.செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன்இணைந்தார். கட்சியில் இணைந்த அடுத்த நிமிடமே அவருக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.மேலும்4மாவட்டங்களுக்கு(கோவை,ஈரோடு,திருப்பூர்,நீலகிரி)அமைப்புபொதுச்செயலாளர்பதவியும்வழங்கப்பட்டுள்ளதாகதகவல்கள்வெளியாகிஉள்ளன.கே.ஏ.செங்கோட்டையனின்அரசியல்அனுபவம்தமிழகவெற்றிக்கழகத்தின்வளர்ச்சிக்குபயன்படும்என்பதில்மாற்றுக்கருத்துஇல்லை.கே.ஏ.செங்கோட்டையனின்சொந்தமாவட்டமான ஈரோட்டில் 8 சட்டமன்றதொகுதிகள்இருக்கின்றன.அதாவது,ஈரோடுகிழக்கு,ஈரோடுமேற்கு,மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம், பவானிசாகர் ஆகிய 4 தொகுதிகளில் அ.தி.மு.க.வும்,மொடக்குறிச்சியில்அ.தி.மு.க.வின்
கூட்டணிகட்சியானபா.ஜ.க.வும்வெற்றிபெற்றிருக்கிறது. ஆக, 8-ல் 5 தொகுதிகளில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியேவெற்றிபெற்றுள்ளது.அந்தவகையில்,அ.தி.மு.க.வின்கோட்டையாகவேஈரோடுதிகழ்ந்துவருகிறது.தற்போது,அ.தி.மு.க.வின் கோட்டையை கட்டிக்காத்த செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பதால், அ.தி.மு.க.வின் செல்வாக்கு அங்கு குறைந்து,தமிழக வெற்றிக் கழகத்தின் செல்வாக்கு அதிகரிக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஈரோடு கொங்கு மாவட்டங்களில் ஒன்று. அருகே உள்ள சேலம் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். கொங்கு மாவட்டங்களில் கவுண்டர்கள் வாக்கு அதிகம். அந்த வகையில், எடப்பாடி பழனிசாமி, கே.ஏ.செங்கோட்டையன் இருவருமேகவுண்டர்கள். எனவே, கவுண்டர்களின் வாக்கு யாருக்கு அதிகம் கிடைக்கும் என்ற தேர்தல் கணக்கு இப்போதே தொடங்கிவிட்டது.