Tamil News
திண்டுக்கல் கலெக்டரிடம் பெண் ஒருவர் கணவர் மீது புகார் ; முத்தலாக் விவாகரத்து கோரியதால் பரபரப்பு
பரக்கத் பானு என்ற பெண் ஒருவர் கர்நாடகாவை சேர்ந்தவர். இவர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்று கொடுத்துள்ளார்.
அதில் திண்டுக்கல்லை சேர்ந்த முகம்மது யூசுப் என்பவர் தன்னை கடந்த 2011-ஆம் ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது தனக்கு ஒன்றரை வயதில் குழந்தை இருப்பதாகவும், இந்நிலையில் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதுடன் , தொலைபேசியில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்துவிட்டு, மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிப்பதாக புகார் கூறியுள்ளார்.
இது குறித்து மகளிர் காவல்நிலையத்தில் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ,தற்போது அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளதாகவும், இதுபற்றி பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.