fbpx
ChennaiRETamil Newsதமிழ்நாடு

சென்னை திருவிக நகரை புரட்டி எடுக்கும் கொரோனா…! முழு பட்டியல் வெளியீடு

Chennai Corporation releases corona case list

சென்னை: சென்னையில் அதிகபட்சமாக திருவிக நகரில் 287 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக சென்னை மாநகராட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

கொரோனாவை எதிர்கொள்ள 3ம் கட்ட ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. வரும் 17ம் தேதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் இருந்தாலும், கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை குறையவில்லை.

குறிப்பாக சென்னை கொரோனா பரவல் மையமாக மாறியிருக்கிறது. சென்னையில் அதிகபட்சமாக திருவிக நகரில் 287 பேருக்கு கொரோனா தொற்றுகள் இருப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்து இருக்கிறது.

 

அதன்படி சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருவிக நகரை தொடர்ந்து ராயபுரத்தில் அதிக பாதிப்பு காணப்படுகிறது. அதன்படி 200 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

கோடம்பாக்கம் 177 பேர், அண்ணா நகர் 107 பேர், தண்டையார்பேட்டை 94 பேர்  கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிக கொரோனா பாதிப்புகள் இருப்பதால் சென்னை மத்திய அரசின் சிவப்பு மண்டல பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றிருக்கிறது.

Tags

Related Articles

Back to top button
Close
Close