Others
முதல்வரிடம் கோயம்புத்தூர் மக்கள் எதிர்ப்பார்ப்பு
கோயம்புத்தூர்: பேருந்தில் ஏறி மக்களிடம் விசாரிப்பது ரேஷன் கடையில் புகுந்து திடீரென ஆய்வு செய்வது.. இதெல்லாம் ஓல்ட் பேஷன்..ஏதாவது ஒரு BDO ஆபீசில் நுழைந்து எதாவது ஒரு கிராம ஊராட்சி விஷயத்தில் தலையிட்டு எப்படியெல்லாம் ஊழல் செய்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து நாலு பேரை சீட்டு கிழியுங்கள்..
ஏதாவது ஒரு தாலுகா ஆபீசில் நுழைந்து பட்டா விஷயத்தில் யாரையெல்லாம் எப்படியெல்லாம் சாகடிக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து நாலு பேரை சீட்டு கிழியுங்கள்..ஏதாவது ஒரு முனிசிபாலிட்டி ஆபீஸ்க்குள் நுழைந்து பிளானிங் செக்ஷனில் எல்லா ஆவணங்கள் இருந்தும் இந்த ஃபைலை எல்லாம் ஏன் கிளியர் செய்யாமல் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டு பத்து பேரை ஓட விடுங்கள்..இதை செய்தாலே கொஞ்சமாவது மக்களுக்கான வேலைகள் முன்னோக்கி நடக்கும்.. சூலூருக்கு வாங்க முதல்வரே