கரூர் மாவட்டாட்சியர் நேரடி கவனத்திற்க்கு…..
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிந்தலாவாடி பஞ்சாயத்திற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கம் ஒன்று வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடமானது மிகவும் குறுகிய அறைகளை கொண்டது ..இங்கே பணியாற்றும் அரசு ஊழியர்கள் போதிய இடவசதி இல்லாத சூழலில் மிகவும் நெரிசலால் அவதிபட்டு வருகின்றனர்…பொது மக்களும் , பயனாளிகளும் அமர்வதற்க்கு கூட இடம் போதாத சூழலில் எரிச்சல் அடைகின்றனர் பலமுறை பொதுமக்களின் சார்பிலும் மதிமுக மாவட்ட இளைஞரணி சார்பிலும் ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.. அதிகாரிகள் மனு வாங்கிய பிறகு ஆய்வு நடத்துவார்கள் பின்னர் அப்படியே கிடப்பில் போட்டுவிடுவார்கள் ஏற்கனவே அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடமும் இருக்கிறது ஆகவே புதியதாக நியமிக்கபட்டு இருக்கின்ற ஆட்சியர் விரைந்து நடவடிக்கைகள் மேற்க்கொண்டு நிரந்தரமான புதிய கட்டிடம் கட்டி பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம்…தொடர்ந்து மதிமுக மாவட்ட இளைஞர் அணி சார்பில் கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது …வீரா.கோபி மதிமுக மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்…கரூர் மாவட்டம்.. செய்தியாளர் கரூர் ரமேஷ்