ராஜ்ய சபா தேர்தல் முடிவுகள் வெளியீடு…! 12 பேர் தேர்வு!
Rajyasabha election results
டெல்லி:
ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தலில் 12 பேர் மீண்டும் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மார்ச் ராஜ்ய சபா தேர்தலில் 42 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
மற்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்டது.
நேற்று அந்த தேர்தல் நடைபெற்றது. அதில், ஜோதிராதித்ய சிந்தியா, மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் மக்களவை துணைத் தலைவர் தம்பி துரை, கேசி வேணுகோபால் உள்ளிட்டோர் முதன்முறையாக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
புவனேஷ்வர் கலிதா, பிரேம் சந்த் குப்தா ஆகியோர் 5வது முறை தேர்வாகினர். திருச்சி சிவா, கேசவ் ராவ், பிஸ்வஜீத் டைமாரி, பரிமல் நத்வானி ஆகியோர் 4வது முறையும், சரத் பவார், திக்விஜய் சிங் உள்ளிட்டோர் 2வது முறையும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஜி.கே.வாசன், தினேஷ் திரிவேதி, நபம் ரபியா ஆகியோர் 3வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தேவே கவுடா, சிபு சோரன் ஆகியோர் 2வது முறையாக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.