திமுக கூட்டணியில் இரண்டுகம்யூனிஸ்ட் கட்சிகள் தொடருமா….?
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 37 நாட்கள் மட்டுமே உள்ளது. இதனையடுத்து கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வில் அரசியல் கட்சிகள் களம்இறங்கியுள்ளது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சியை கூட்டணியில் இணைத்துள்ளது. இதன் காரணமாக கடந்த 2021ஆம் ஆண்டு கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை விட தற்போது குறைவான தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என தெரிவித்துள்ளது. அந்த வகையில்மதிமுக,முஸ்லிம்லீக்,கொங்குகட்சிக்குதொகுதிகளைகுறைத்துவழங்கப்பட்டுள்ளது. இதே போல மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்
கட்சிக்கும்கடந்தமுறை6தொகுதிகள்ஒதுக்கப்பட்டநிலையில்,தற்போது5தொகுதிகள்மட்டுமேஒதுக்கமுடியும்எனதொகுதிபங்கீடுபேச்சுவார்த்தையின்போதுதெரிவிக்கப்பட்டது. ஆனால்இதனைஇரண்டுகம்யூனிஸ்ட்கட்சிகளும்ஏற்றுக்கொள்ளவில்லை.இதன்காரணமாகதொகுதிபங்கீடுமுடிவடையாத நிலையானது ஏற்பட்டுள்ளது. தற்போது வரை காங்கிரஸ், மதிமுக,கொ.ம.தே.க,ஐ.யு.எம்.எல்,உட்பட5கட்சிகளுடன்தொகுதிபங்கீட்டு,ஒப்பந்தம்கையெழுத்தாகி உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளை விட கூடுதலான தொகுதிகள் ஒதுக்க முடியாது என்று திமுகவும், தங்களுக்கு கூடுதலான தொகுதிகள் வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொடர்ந்து அழுத்தம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தலைமையிலான பேச்சுவார்த்தை குழு திமுகவுடன் மூன்றாவது கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றது.இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சண்முகம், கடந்த முறை போட்டியிட்டதொகுதிகளை விட கூடுதலான தொகுதிகளில் போட்டியிட வேண்டும்என்றகோரிக்கைதிமுகபேச்சுவார்த்தை குழு உடன் தெரிவித்தோம். அனால் பேச்சுவார்த்தை முடிவுக்குவருவதில்சிரமம்ஏற்பட்டுள்ளது. எங்களின் கோரிக்கை குறித்து முதல்வரிடம் கலந்து பேசி அடுத்தக்கட்ட தகவலை தெரிவிப்பதாககூறியுள்ளனர். எனவே ஓரிரு நாட்களுக்குள் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்ப்பதாக கூறினார். திமுகவிடம் இருந்து கூடுதல் தொகுதிகளை பெறுவதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவோம். ஒவ்வொரு கட்சியும் தங்களின் பலத்திற்கு ஏற்ப தொகுதிகளை கூடுதலாக கேட்டுப் பெறுவது
அவர்களுடைய உரிமை. எனவே அந்தவகையில் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.கூடுதல் தொகுதிகளை விட குறைவாக ஒதுக்கினால், மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில குழு கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பேசி முடிவெடுக்கப்படும் என சண்முகம் கூறினார்.