Others
ஈரோடு–கடம்பூர் அருகே மது விற்ற 6 பேர் கைது..

ஈரோடு மாவட்டம், கடம்பூர், தாளவாடி மற்றும் சென்னிமலை போலீசார்தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அரசு மதுபாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த கடம்பூரை சேர்ந்த ராஜன் (59), மாணிக்கம் (60), பெரியசாமி (35), ராமர் (29), தாளவாடி, இக்லூரை சேர்ந்த அலுமந்த நாயக்கர் (70) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்து 542 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.