fbpx
Others

தேனி-சுகாதாரமற்ற , காளான், கிரேவி வியாபாரம் படுஜோர்நடவடிக்கை எடுப்பார்களா.?

தேனியில் 13/13/2023 இன்று மதுரை சாலையில் ஆர்.சி. சர்ச் அருகில் பாஸ்ட் புட் கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.அதில் சுகாதாரமற்ற முறையில் இருந்த உணவு பொருட்களை கைப்பற்றி அழித்தனர். மேலும் நகரெங்கும் புற்றீசல் போல இது போன்ற கடைகள் முளைத்து, பாரஸ்ட் ரோடு, மதுரை ரோடு, பெரியகுளம் ரோடு, அல்லிநகரம், சமதர்மபுரம்சந்திப்பு, பழைய தபால் ஆபீஸ் அருகில் என்று பல்வேறு முக்கிய இடங்களிலும், பல்வேறு தெருவிலும் இது போன்ற கடைகள் அமைத்து கவர்ச்சியாக நிறங்களை ஏற்றியும், காளான் கிரேவி என்ற பெயரில் முட்டைகோஸ்களை குறைந்த விலையில் வாங்கி, அஜினோமோட்டோ கலந்த மாவில் கலந்து காளான் கிரேவி என்று பொதுமக்களையும், குழந்தைகளையும்ஏமாற்றி தரமற்ற,சுகாதாரமில்லாத முறையில் விற்பனை செய்கின்றனர், இதனால் தேவையற்ற நோய்கள் உருவாகின்றன… இவற்றை அடிக்கடி எல்லா இது போன்ற கடைகளை ஆய்வு செய்து இது போன்ற கடைகள் மீது உடனடியாக உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், பெயரளவில் சோதனை என்று இல்லாமல் அடிக்கடி எல்லா கடைகளிலும் ஆய்வுகள் நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்……………… தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி…

Related Articles

Back to top button
Close
Close