திருத்தணி கால்நடை மருந்தக வளாகத்தில் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம்.
திருத்தணி கால்நடை மருந்தக வளாகத்தில் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. திருவள்ளூர் உலக வெறிநோய் தடுப்பு தினத்தையொட்டி இன்று திருத்தணி கால்நடை மருந்தகத்தில்செல்லப்பிராணி களுக்கு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இது குறித்து திருத்தணி கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் தாமோதரன் கூறுகையில், ‘ஆண்டுதோறும், செப்டம்பர் 28-ந் தேதி உலக வெறிநோய்தடுப்புதினம்ஆகும்.இந்ததினத்தில் கடந்தபத்துஆண்டுகளுக்குமேலாகதிருத்தணிகால்நடைமருந்தகத்தில்செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி இலவசமாக போடும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.அந்தவகையில்இன்று(வியாழக்கிழமை) திருத்தணி கால்நடை மருந்தக வளாகத்தில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது ஆகையால் திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் தங்களது செல்லப்பிராணிகளான நாய்கள் மற்றும் பூனைகளை அழைத்து வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள்.