தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெனலிஸ்ட் திருவள்ளூர் மாவட்ட பேரவை கூட்டம்–சிறப்பு செய்தி..
தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெனலிஸ்ட் திருவள்ளூர் மாவட்ட பேரவை கூட்டம் பெரியபாளையம் சிபிஎம் அலுவலகத்தில் நடைபெற்றது மாவட்ட தலைவர். கோவிந்தராஜுலு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர். ரூபன் வரவேற்றார் சிறப்பு அழைப்பாளராக மாநில நிர்வாகிகள் முத்து, ரவிச்சந்திரன், வேளாங்கன், முருககனி, மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகிகள். தேவேந்திரன், அப்சர் பாஷா கலந்து கொண்டனர்.கூட்டத்தில் மூத்த அரசியல்வாதி நல்ல கண்ணுமறைவு மற்றும் மறைந்த பத்திரிகையாளர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுபுதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பழைய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டதுமாவட்ட அளவில் நிர்வாகிகள் மாற்றம் நடைபெற்றது. மாவட்ட பொதுச் செயலாளராக வெங்கடேஷ்வரலு, மாவட்ட பொருளாளராக ரூபன் மாவட்ட தலைவராக மீண்டும் கோவிந்தராஜுலு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.மாநில நிர்வாக குழு உறுப்பினராக முனுசாமி தேர்வு செய்யப்பட்டார்மூன்று மாதத்திற்கு ஒரு தடவை மாவட்ட செயற்குழு கூடி ஆலோசனை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது மாவட்டத்தில் உள்ள தாலுகாக்களில் ஆலோசனை கூட்டத்தை நடத்திடவும் ஆலோசிக்கப்பட்டது.மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


