தேனி-விஷத்தை விலைக்கு விற்க்கும் வியாபாரிகள்மீதுநடவடிக்கை…?
தேனி மற்றும் தேனியைசுற்றியுள்ள பகுதிகளிலும் பாஸ்ட் புட் என்ற பெயரில் மக்களை மெகா ஏமாற்றும் வேலைகள் நடைபெற்று வருகிறது….. காளான் கிரேவி என்ற பெயரில் காளானே பயன்படுத்தாமல் விற்பனை செய்வது தான் இவர்களின் சாதனையே !!! இதனை வாங்கி உண்ணும் வர்கள் இதைப் பற்றி விளக்கம் கேட்டால் எதுவும் சொல்வதும் இல்லை….முறையான அனுமதி இல்லாமல் மக்களை கவரும் வகையில் வண்ணங்களை சேர்த்து சிக்கன், மீன்களை பொறித்த எண்ணையிலேயே மீண்டும் மீண்டும் பொறிப்பது அதே எண்ணையை மீண்டும் மீண்டும் இந்த பொருட்களுக்கு பயன்படுத்துகின்றனர்….. இதனை வாங்கி உண்பவர்களுக்கு ( food poison) உடலுக்கு ஒவ்வாமை மற்றும் பற்பல நோய்கள் வர வாய்ப்பு உள்ளது….. ஆதலால் இந்த விற்பனை செய்கின்ற நிறுவனங்களை தேனி மாவட்ட நிர்வாகமும், நகராட்சி சுகாதாரத்துறை நிர்வாகமும் அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்…………… இவற்றை அதிகாரிகள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள கடைகளை ஆய்வு செய்துநடவடிக் கை எடுப்பார்களா அல்லது காற்றில் பறக்க விட்டு விடுவார்களா என்று தெரியவில்லை என பொதுமக்கள்எதிர்பார்க்கின்றனர்……………………………… தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.