ஆற்காடு–முத்தமிழர் கலைஞரின் 7வது ஆண்டு நினைவு நாள்….சிறப்புசெய்தி
7வது ஆண்டு நினைவு நாளை யொட்டி முத்தமிழர் கலைஞர் திருஉருவப் படத்திற்கு ஆற்காடு தொகுதி எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
ஆற்காடு நகர திமுக கழகம் சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் 7 வது ஆண்டு நினைவு நாளை யொட்டி ஆற்காடு அண்ணா சிலை அருகே அலங்கரிக்கப்பட்டிருந்த கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் இந்நிகழ்விற்கு அவைத்தலைவர் ஏ கே சுந்தரமூர்த்தி, நகர செயலாளர் ஏ வி. சரவணன் தலைமை தாங்கினார்,
ஆற்காடு தொகுதி எம்எல்ஏ. ஜெ எல் ஈஸ்வரப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கலைஞரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் இந்நிகழ்வில் ஆற்காடு நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் ராஜசேகர், நகர மன்ற உறுப்பினர் விஜி, ஆனந்தன், முன்னா பாய், கோப்பு தமிழ்ச்செல்வி,உள்ளிட்ட மாவட்டம் நகர கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்