fbpx
Others

சர்வதேச மகளிர் தினம்:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பெண்களின் மகத்தான சாதனைகளை கொண்டாடும் வகையில் உலக அளவில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த நிலையில், சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து  செய்தியை பகிர்ந்துள்ளார். 
“புத்துலக ஆக்கத்திற்கு இன்றியமையாத இருக்கும் மகளிர் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள். இரத்த பேதம் , பால் பேதம் கூடாது என்ற முழக்கத்தோடு ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்குமான சமூக விடுதலைக்காக போராடும் இயக்கம்தான் திராவிட இயக்கம் . பெண் ஏன் அடிமையானாள்? என்று கேள்வி எழுப்பி அறிவொளி பாய்ச்சிய அறிவாசான் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரது வழி நடைபோடும் நமது திராவிட மாடல் அரசு மகளிர்கான எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
பெண்களுக்கு சொத்தில் சம உரிமை ,அரசு வேலைவாய்ப்புகளில் 30 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு இப்போது 40 விழுக்காடாக உயர்வு,  தொடக்கப்பள்ளிகளில் முழுதும் பெண் ஆசிரியர்கள் நியமனம் , உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு , பேறுகால விடுப்பு ஓராண்டாக உயர்வு , மகளிர் சுய உதவிக்குழு , இலவச எரிவாயு அடுப்பு,  ஈவேரா மணியம்மையார் , டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் ராமாமிர்தம் , அம்மையார் டாக்டர் தர்மாம்பாள் ஆகியோரின் பெயரில் திருமண நிதி உதவி உள்ளிட்ட மகளிர் நலத் திட்டங்கள்,  கல்வி கட்டணச் சலுகைகள்,  நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் என்று பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.  இத்திட்டங்கள் பெண்களுக்கான சமூக பொருளாதார உரிமைகளை மீட்டு அளிக்கும் திட்டங்கள்.
 திராவிட முன்னேற்ற கழகம் செயல்படுத்திய திட்டங்கள் , இன்றைக்கு நாட்டுக்கே வழிகாட்டியாக அமைந்துள்ளன.  சொற்களால் பெண்களை போற்றி செயல்களை அடிமைப்படுத்திய பழமைவாத காலம் மிக வேகமாக மாறி வருகிறது.  பெண்களது நலனும்,  உரிமையும் காக்கப்படும் மகளிர் முன்னேற்றத்திற்கு நமது திராவிட மாடல்  அரசு என்றும் துணை நிற்கும் . அடிமைத்தனத்தை தகர்த்தெறியும் வலிமைமிகு போர்க்குரல் பெண்களே…!”” என்று தெரிவித்துள்ளார்

Related Articles

Back to top button
Close
Close