Others
ஸ்டாலின்–வாஜ்பாய்பிரதமராக இருந்தபோது மதச்சார்பின்மையை பேணி காத்தவர் .
வாஜ்பாய்பிரதமர்பொறுப்பில்இருந்தபோதுமதச்சார்பின்மையை பேணி காத்தவர் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளதாவது: ‘முன்னாள் பிரதமர் திரு. அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் நூறாவது பிறந்தநாளில் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்புமேம்பாட்டுக்காகஅவர்ஆற்றியபங்களிப்பினையும், நமது தலைவர் கலைஞர் அவர்களுடன் அவர் கொண்டிருந்த நட்புறவினையும் நினைவுகூர்கிறோம்.வலதுசாரிக் கருத்தியல் கொண்டவராக இருந்தாலும், பிரதமர் பொறுப்பில் இருந்தபோது நாட்டின் மதச்சார்பின்மைப் பண்பை அவர் பேணிக்காத்தார். அவரது வாழ்வும் பணியும் நிலைத்து நிற்கும்!’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.