பயங்கரவாதிகளுக்கு ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டுகளை வழங்கியதே பாகிஸ்தான் ராணுவம் தான் – அதிர்ச்சி தகவல்கள்.
புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது தொடர்பான கேள்விகளுக்கு உண்மையான ஆவணங்களையோ அல்லது உளவுத்துறை தகவலையோ தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி ஹபீஸ் சையத் மற்றும் ஜெய்ஹ் இ முகமது பயங்கரவாதி மசூத் அசாரே போன்றோரை பாதுகாக்கும் பணியில் பாகிஸ்தான் ராணுவமும், உளவுத்துறையும் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்கள் சர்வதேச பார்வையிலிருந்து பதப்பிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தற்போது புல்வாமாவில் 40 சிஆர்பிஎப் வீரர்களை கொல்ல பயன்படுத்தப்பட்ட ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டுகளை பாகிஸ்தான் தான் வழங்கியுள்ளதாக உளவுத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் பாகிஸ்தானின் தலைமையகமான ராவல்பிண்டியில் தான் ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டுகள் ஜெய்ஷ் பயங்கரவாதிகளிடம் அந்நாட்டு ராணுவம் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் இந்தியா அதிரடியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பதால் பாகிஸ்தானும் முன்கூட்டியே உஷார் நிலையில் உள்ளது.