என்எல்சி கொதிகலன் வெடி விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்வு….!
NLC death raises to 9
கடலூர்: என்.எல்.சி கொதிகலன் வெடித்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் கடந்த 01-ஆம் தேதி 5-ஆவது அலகிலுள்ள கொதிகலன் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே 6 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.
மேலும் 17 பேர் தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை அப்பலல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் நெய்வேலி நகரியம் 7வது வட்டத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்ற துணைத் தலைமைப் பொறியாளராக பணியாற்றி வந்தவர் 2ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் இன்ட்கோசெர்வ் தொழிலாளி செல்வராஜ் என்பவரும், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் என்பவரும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர். இதையடுத்து என்.எல்.சி கொதிகலன் வெடித்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.