fbpx
Others

நீடாமங்கலம்–இயற்கை உரங்களை கொண்டு காய்கறி தோட்டம் அமைத்தல் பயிற்சி வகுப்பு

  ஏப்ரல்19 நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் திருச்சி அரசு மகளிர் தோட்டக்கலை கல்லூரி மாணவர்களுக்கு நஞ்சில்லா காய்கறி தோட்டம் அமைத்தல் பற்றிய பயிற்சி வகுப்பு துணைத் தலைவர் ராஜேந்திரன்தலைமையிலும் கௌரவத் தலைவர் சந்தான ராமன் முன்னிலையிலும் நடைபெற்றது.வேளாண்மை பயிற்சியாளர் செந்தில்நாதன் கல்லூரி மாணவர்களுக்கு உணவு பயிர் சாகுபடிகளை பற்றியும், உளுந்து விதைத்தலின் படிநிலைகள் கையாள வேண்டிய வழிமுறைகள் இயற்கை உரங்கள் மூலம் தோட்டப்பயர்களை உருவாக்குதல் , நிலம் மாசுபாடு இல்லாத விவசாயம் பற்றிய தகவல்கள் கூறி பயிற்சி வழங்கினார். பயிற்சி பெற்றமகளிர் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் திருச்சியைச் சேர்ந்த மாணவிகள் ரோசினி , பிரியங்கா, ஷெரின் மெல்பிஷா, சர்மிளா, சௌபர்னிகா, உதயா, வதனா,விவேகா ஆகியோர் ஊரக தோட்டக்கலை பணி அனுபவத்தில் பட்டுக்கோட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்துடன் இணைந்து அரசு உதவி பெறும்இலக்குமி விலாச நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தோட்டக்கலை குறித்தும், தோட்டக்கலை பயிர்கள் விளைவித்தல் ,மற்றும் மாடித்தோட்டம் அமைத்தல் குறித்தும் தகவல்கள் வழங்கி விழிப்புணர்வு செய்தனர். நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் தேவிலட்சுமி ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர் முன்னதாக செயலாளார் ஜெகதீஷ் பாபு அனைவரையும் வரவேற்றார் ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் நன்றி உரையாற்றினார்

Related Articles

Back to top button
Close
Close