அம்மா ஹோட்டல் இட்லி ரூ.1 ஆனால் ஜெயலலிதா சாப்பிட்ட உணவு தொகை ரூ.1 கோடியா – கஸ்தூரி
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த போது அவர் சாப்பிட்ட உணவு தொகை ரூ.1 கோடி என்பதை அப்போலோ நிர்வாகம் கூறியதை நடிகை கஸ்தூரி ரூ.1 கோடியா என்று விமரிசித்துள்ளார்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் திடீர் உடல்நல குறைவால் கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி இரவு சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எனவே தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது எனினும் அவர் உடல் நிலையுள் முன்னேற்றம் ஏற்படாததால் அவர் அதே ஆண்டில் டிசம்பர் 5-ஆம் தேதி இரவு காலமானார். இதை தொடர்ந்து ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகம் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது.
தற்போது ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கிய அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சைக்கான செலவின விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கியபோது அவருக்கு வழங்கப்பட்ட உணவு மற்றும் பானங்களுக்கான 75 நாட்களுக்கான தொகையாக ரூ.1 கோடியே 17 லட்சமாக செலவாகியுள்ளது என்று பில் தொகையை வெளியிட்டுள்ளது.
இவ்வாறு வெளியிட்டுள்ள இந்த தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கஸ்தூரி போன்றே பலரும் தங்கள் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.