fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

தேனியில் 77 பேருக்கு கொரோனா…! மெல்ல அதிகரிக்கும் பாதிப்பு!

77 new corona cases in theni

தேனி:

தேனியில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக அதிகரித்து வருகின்றது. இன்று மட்டும் இதுவரை 77 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. 1 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் நேற்று மட்டும் 3,827 பேருக்கு ஒரே நாளில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் 1,747 பேருக்கு  கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 3வது நாளாக 2 ஆயிரத்திற்குக் குறைவாக பாதிப்பு பதிவானது.

ஒரு வாரமாக தமிழகத்தில் 4 ஆயிரத்தை கடந்து வந்த பாதிப்பு முதல் முறையாக நேற்று குறைந்தது. அதைபோல தென் தமிழகத்தில் பாதிப்பு தற்போது அதிகரித்த வண்ணம் உள்ளது.

குறிப்பாக தேனியில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக அதிகரித்து வருகின்றது. இன்று மட்டும் இதுவரை 77 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 1205 ஆக உயர்ந்துள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close