ChennaiGeneralRETamil Newsதமிழ்நாடு
இது சென்னை நிலவரம்…! ஹைகோர்ட் நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா…?
chennai highcourt judges got corona
சென்னை:
சென்னையில் நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதாக சொல்லப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மார்ச் 24ம் தேதியில் இருந்து நீதிமன்றங்கள் மூடப்பட்டன. முக்கிய வழக்குகள் மட்டும், நீதிபதிகள் வீடுகளில் இருந்தே காணொலி காட்சி மூலமாக விசாரிக்கப்பட்டு வந்தது.
ஜூன் 1 தளர்வுக்குப் பிறகு நீதிபதிகள் தங்கள் அறைகளில் காணொலி காட்சிகள் மூலமாக விசாரித்து வந்தனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் உள்பட நீதிமன்ற பணியாளர்கள் பலருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனால் மீண்டும் நீதிபதிகள் தங்கள் வீடுகளில் இருந்தே வழக்குகளை விசாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்துதலில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.