fbpx
Tamil News

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர்.

ஸ்ரீநகரில் உள்ள பத்காம் மாவட்டத்தில் உள்ள சாதோர்யா என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்ததை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது இருதரப்பினருக்கும் இடையே சண்டை வெடித்தது.

ஆனால் அப்பகுதியில் இருந்த மக்கள் தெருக்களுக்கு வந்து பாதுகாப்பு படையினருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை பாதுகாப்பு படையினர் விரட்டினர். இவ்வாறு பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

மேலும் அப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளார்களா? என்ற கோணத்தில் பாதுகாப்பு படையினர்  தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close