Others
ஶ்ரீ சத்ய சாய் “பிரேமதரு” என்னும் ஒரு கோடி மரம்நடும் நிகழ்ச்சி…!சிறப்பு செய்தி.

ஶ்ரீ சத்ய சாய் “பிரேமதரு” என்னும் ஒரு கோடி மரம்நடும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் காரமடை, மேட்டுப்பாளையம் வித்யா விகாஸ் மெட்ரிக் பள்ளி நிர்வாகம், மாணவர்கள் மற்றும் ஶ்ரீ சத்ய சாய் சேவா நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து 200 மரக்கன்றுகள் நட்டனர்.ஶ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் கோவை மாவட்ட தலைவர் திரு. வெங்கடேஷ் நாராயணன் மற்றும் வித்யா விகாஸ் மெட்ரிக் பள்ளியின் இயக்குநர் சிறப்புரையாற்றினார். ஸ்ரீ சத்ய சாய் பிரேமா தரு திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நன்றி கூறினார்.அனைத்து மரக்கன்றுகளும் ஒவ்வொரு மாணவரிடமும் ஒப்படைக்கப்பட்டு, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர்.