Others
விஜய்–கேப்டனுக்கு அஞ்சலி செலுத்துவாரா ?
கேப்டன் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் நாளை அனுசரிக்கப்பட உள்ளது. இதில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த விஜய்யை நேரில் சந்தித்து விஜயபிரபாகரன் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், விஜயகாந்தின் வெண்கல சிலை ஒன்றையும் அவரது மகன் வழங்கினார். கேப்டன் மீது பற்று கொண்ட விஜய், நாளை அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.