fbpx
Others

தேனி மாவட்ட பத்திரிக்கை நிருபர்களுக்கு பாதுகாப்பு இல்லை….?

தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனி மாவட்ட பத்திரிக்கை நிருபர்களுக்கு பாதுகாப்பு இல்லை !!! மாநில மற்றும் மத்திய அரசே அனைத்து பத்திரிகை நிருபர்கள் & பத்திரிகையாளர்களுக்கு உடனடியாக உரிய பாதுகாப்பு வழங்கிடு !!! தேனி மாவட்டம் ஜி.உசிலம்பட்டி மாலைமுரசு நிருபர் பால்பாண்டி அவர்கள் சில சமூக விரோதிகளால் , கொலை வெறியோடு அரிவாளால் தலையில் தாக்கப்பட்டு க.விலக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.உடனடியாக தேனி மாவட்ட காவல்துறையினர் துரிதமான நடவடிக்கையின் மூலம் குற்றவாளிகளை கைது செய்து இருக்கிறார்கள்.இந்த சம்பவத்தில் துரித நடவடிக்கை எடுத்த காவல்துறையினருக்கு இந்து எழுச்சி முன்னணி சார்பாகபாராட்டுதனையும் வாழ்த்துக்களையும் தெரியப்படுத்துவதோடு, இச் சம்பவத்தின்பின்புலத்தில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை துரித விசாரணை செய்து அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி , மற்றும் பொதுமக்கள் சார்பாகவும் , சமூக ஆர்வலர்கள், பத்திரிகைஊடகங்கள்சார்பாகவும்கோரிக்கைவிடுத்துள்ளனர்………………….ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

 

Related Articles

Back to top button
Close
Close