Others
திருவாரூர்–அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம்ஆர்ப்பாட்டம்..

திருவாரூர்மாவட்டத்தில்100நாள் வேலை திட்டத்தை உடனடியாக துவங்கு … சட்ட கூலி 319 ஐ குறைக்காமல் வழங்கிடு … உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 80 இடங்களில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஊராட்சி அலுவலகங்களுக்கு முன்னால் மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டங்கள் நடைபெற்றது.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 28.06.2024 ஊராட்சி அலுவலகம் முன்பு மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் ஓளிமதி ஊராட்சி அலுவலகம் முன்பு S.சுந்தரமூர்த்தி தலைமையில் மாவட்ட செயலாளர் கந்தசாமி முன்னிலையிலும் மற்றும் பல இடங்களில் அந்த பகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 15,000 க்கு மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள்பங்கேற்றனர்