திருப்பத்தூர்– விரைவில் நிலோபர் கபில் திமுகவில் இணைகிறார்.
கடந்த 2016ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர் நிலோபர் கபில். அந்த காலகட்டத்தில் அப்போதைய வணிக வரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணிக்கும் இவருக்கும் இடையே நிலவி வந்த அதிகாரப் போட்டி,மாவட்டஅரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இவர்களுக்கிடையிலான மோதல் போக்கு
பகிரங்கமாகவே வெடித்தது. இதன் விளைவாக, 2021 சட்டமன்றத் தேர்தலில் இவருக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. மேலும், கட்சிக்கு எதிராகச் செயல்பட்டதாக கூறி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார். இடைப்பட்ட காலத்தில் அவர் மீது வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி புகார்கள் எழுந்தபோதும், அவர் அவற்றை சட்டரீதியாக சந்திப்பதாக கூறி பொதுவாழ்விலிருந்து சற்று ஒதுங்கியிருந்தார்.பிறகு ஓபிஎஸ் – ஈபிஎஸ் இணைந்த பிறகு மீண்டும்அதிமுகவில்இணைந்தபோதிலும்,கட்சித்தலைமைதொடர்ந்துகே.சி.வீரமணிக்கே அதிகமுக்கியத்துவம்அளிப்பதாகவும்,தன்னைதிட்டமிட்டுஓரங்கட்டுவதாகவும் நிலோபர் தரப்புகடும்அதிருப்தியில் இருந்து வந்தது. அதிமுகவின் உட்கட்சிப் பூசலும், தகுந்த அங்கீகாரம் கிடைக்காத சூழலுமே அவரைத் திராவிட முன்னேற்றக் கழகத்தை நோக்கி நகர்த்தியுள்ளது.வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தின் பிற பகுதிகளில் நிலோபர் கபிலுக்கு எனத் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. குறிப்பாக சிறுபான்மையின மக்களின் வாக்கு வங்கியில் அவர் ஒரு முக்கியப் புள்ளியாகத் திகழ்கிறார். இந்நிலையில்தான், ஜோலார்பேட்டை பொன்னேரியில் இன்று திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு நடைபெறுகிறது.. இந்தே நிகழ்வில், நிலோபர் கபில் இணைப்பு நிகழ்வுமிகப்பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.இதுதிருப்பத்தூர்மாவட்டஅரசியலில்ஒருமிகப்பெரியமாற்றத்திற்கானதொடக்கமாகப்பார்க்கப்படுகிறது.இன்றுநடைபெறும்மாநாட்டில்தனதுஆயிரக்கணக்கானஆதரவாளர்களுடன் அவர் திமுகவில் இணைய விரிவானஏற்பாடுகளைசெய்துள்ளதாகவும்
தெரிகிறது.. இது தொடர்பாக ஏற்கனவே திமுகவின் மாவட்ட மற்றும் மாநில அளவிலான முக்கிய நிர்வாகிகளுடன் அவர் பலமுறை ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.அவரதுவருகைதிமுகவின்அடிமட்டத்தொண்டர்களிடையேஒருவிதஎதிர்பார்ப்பைஏற்படுத்தியுள்ளது. நிலோபர் கபிலின் இந்த வருகை திமுகவிற்கு திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதிகளில் கூடுதல் பலத்தைச் சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக, அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் சில நகர்ப்புறப் பகுதிகளில் சிறுபான்மையின வாக்குகளைத் திமுக பக்கம் முழுமையாகத் திருப்புவதற்கு இவரது நீண்டகால அரசியல் அனுபவம் மற்றும் மக்கள் தொடர்பு பெரிதும் உதவும். முன்னாள் அமைச்சர் ஒருவர், அதுவும் செல்வாக்குள்ள ஒரு பெண் தலைவி ஆளுங்கட்சியில் இணைவது, எதிர்க்கட்சியினரிடையே ஒருவிதமான மனச்சோர்வை உண்டாக்கும். அதே வேளையில், திமுகவின் தேர்தல் களப்பணிகளுக்கு இது ஒரு புதிய உத்வேகத்தையும்,தேர்தல்வியூகங்களில் கூடுதல் சாதகத்தையும் தரும். மேலும், மாவட்ட ரீதியாக கே.சி. வீரமணியின் தனிப்பட்ட செல்வாக்கைச் சிதைக்க நிலோபரின் அரசியல் நகர்வுகள்திமுகவிற்குஒருவலுவானஆயுதமாகஅமையும்எனஅரசியல்விமர்சகர்கள்கருதுகின்றனர்…பொறுத்திருந்துபார்ப்போம்..