Others
சென்னை–வி.ஜி. சந்தோசத்தின் 89வது பிறந்தநாள் விழா…
தொழில், தமிழ், சமூக சேவை எனப் பன்முகத் தளங்களில் முத்திரை பதித்த விஜிபி குழுமத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி. சந்தோசத்தின் 89வது பிறந்தநாள் விழா, சென்னை ஈஞ்சம்பாக்கம் கொண்டாடப்பட்டது.
இதன் தொடக்கமாக, வளாகத்தில் ‘வள்ளுவர் கார்டனை’ விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் அவர்களும் விஜிபி குழுமத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசமும் திறந்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து விஜிபியின் 186வது திருவள்ளுவர் சிலையை விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் திறந்து வைத்தார் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம், மல்லை தமிழ் சங்கத் தலைவர் மல்லை சத்யா, தொழிலதிபர் ரோமா குழும இயக்குநர் ராஜன், விஜிபி ரவிதாஸ், விஜிபி ராஜாதாஸ் உடன் உள்ளனர்.