செந்தில் பாலாஜி – ` வெளியே வருவதற்கான வாய்ப்பு ’ கிடைக்குமா ?
அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தார். அப்போது வேலைவாங்கித்தருவதாகப்பணம்வாங்கியதாகஅவர்மீதுகுற்றச்சாட்டுமுன்வைக்கப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாகவழக்குதொடர்ந்துநடைபெற்றுவந்தநிலையில், அவர் திமுகவில்இணைந்துசட்டமன்றஉறுப்பினராகவும், அடுத்த தேர்தலில் வெற்றிபெற்று அமைச்சராகவும் பொறுப்பேற்றார். இந்தச் சூழலில் 2021-ம் ஆண்டு, அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்தது.இந்த வழக்கு குறித்து விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், 2023-ம் ஆண்டு, ஜூன் மாதம் அமைச்சராகப் பொறுப்பு வகித்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டர். கைதுசெய்த சமயத்தில் அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட, அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை செய்தது, பிறகு தனியார் மருத்துவமனைக்கு மாற்றி அவருக்கு அறுவை சிகிச்சை செய்தது எனப் பல்வேறு நிகழ்வுகள் நடந்துமுடிந்தன. சிறையிலிருந்த செந்தில் பாலாஜிக்கு எதிராகக் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.வழக்குவிசாரணை,சிறைவாசம்ஒருபக்கம்சென்றுகொண்டிருக்க, புழல்சிறைக்குமாற்றப்பட்டார்.சிறையிலுள்ளமருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை தொடரப்பட்டது. நீதிமன்றக் காவலில் இருக்கும் செந்தில் பாலாஜியின் காவல் ஒரு முறை, இரண்டு முறை அல்ல… 48-வது முறையாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

