சீனிவாசா மாநகராட்சி நடுநிலைப்பள்ளியினை நிர்வாகிகள் பார்வையிட்டனர்.

தஞ்சாவூர் – வண்டிக்காரத் தெரு – சீனிவாசா மாநகராட்சி நடுநிலைப்பள்ளியினை நிர்வாகிகள் பார்வையிட்டனர்மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் ஆலோசனைக் கூட்டம் 25.08.2024 காலை முடிந்தவுடன்,அடுத்த மாதம் செப்டம்பர் 15ம் தேதியன்று, மாபெரும் இலவச ஆயுர்வேத பொது மருத்துவ முகாம் நடைபெற இருக்கக்கூடிய திரு.த.ச.சீனிவாசா மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு, டிரஸ்ட் நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.பிறகு, பள்ளியின் நுழைவாயிலில் பிளக்ஸ் பேனர் உட்பட நகரத்தின் முக்கிய இடங்களில் 5 பேனர்கள் வைப்பது,சிகிச்சை எடுக்க வருபவர்களுக்கு முறைப்படி டோக்கன்கள் வழங்குவது, அவர்களை அமர வைக்க சேர்”ஸ் மற்றும் சாமியான அமைப்பது,மைக் செட் அமைப்பது,டீ, ஸ்நாக்ஸ் மற்றும் சாப்பாடு ஏற்பாடு செய்வது என்றும்,ஏழை -எளிய மக்களுக்கு, இலவச ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வகையில் வீடு வீடாக சென்று நோட்டீசைகளை வழங்குவது என்றும்ஆலோசனைக்கப்பட்டது.