Others
சின்னமனூரில் அஇஅதிமுக நகர செயலாளர்வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு.
தேனிமாவட்டம் சின்னமனூரில் அஇஅதிமுக நகர செயலாளர் பிச்சைகனி வீட்டில் நள்ளிரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பி ஓடிவிட்டனர் இச்சம்பவத்தால் சின்னமனூர் நகர் முழுவதும் பரபரப்பான சூழ் நிலை நிலவி வருகின்றன.மேலும் இச்சம்பவம் தொடர்பாக சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கு இடமான இருவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.